sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பொள்ளாச்சி காய்கறி சந்தை ஏலம்; நகராட்சி கமிஷனர் ஒதுக்கீடு செல்லும்

/

பொள்ளாச்சி காய்கறி சந்தை ஏலம்; நகராட்சி கமிஷனர் ஒதுக்கீடு செல்லும்

பொள்ளாச்சி காய்கறி சந்தை ஏலம்; நகராட்சி கமிஷனர் ஒதுக்கீடு செல்லும்

பொள்ளாச்சி காய்கறி சந்தை ஏலம்; நகராட்சி கமிஷனர் ஒதுக்கீடு செல்லும்


ADDED : செப் 12, 2025 11:19 PM

Google News

ADDED : செப் 12, 2025 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த தர்மலிங்கம் என்பவர் தாக்கல் செய்த மனு:

பொள்ளாச்சி நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள, திரு.வி.க., தினசரி காய்கறி சந்தைக்கான 'டெண்டர்' கோரப்பட்டது. மொத்தம் நான்கு பேர் விண்ணப்பித்தோம். சந்தைக்கான ஏலம் நடந்த நாளன்று, ஆளுங்கட்சியை சேர்ந்த ரவுடிகளால், ஏலத்தில் பங்கேற்க விடாமல் தடுக்கப்பட்டேன்.

நான், 22 லட்சம் ரூபாய்க்கு கோரினேன். ஆனால், குறைந்த தொகை குறிப்பிட்ட ஆறுமுகம் என்பவருக்கு, சந்தை ஒதுக்கீடு செய்யப்பட்டது. போலியாக நடத்தப்பட்ட இந்த ஏல நடைமுறைகளை எதிர்த்தும், பொது ஏலம் விட கோரியும், நகராட்சி கமிஷனரிடம் புகார் அளித்தேன். மனுவை நிராகரித்து, கடந்த ஜூன் 11ல் நகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார். கமிஷனரின் இந்த உத்தரவை ரத்து செய்து, காய்கறி சந்தைக்கு பொது ஏலம் விட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதி என்.மாலா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஹாஜா நசிருதீன் ஆஜராகி, ''மனுதாரர் கூறிய குற்றச்சாட்டு தவறானது. ஏலம் நடந்த இடத்தில் இருந்து, மனுதாரர் தாமாக வெளியேறினார். அதையடுத்து, மற்ற ஏலதாரர்கள் முன், டெண்டர் திறக்கப்பட்டு, ஆறுமுகத்துக்கு ஒதுக்கப்பட்டது. டெண்டர் விதிகள்படி, அதிக விலைக்கு ஏலம் எடுத்தவரை விட, 25 சதவீத கூடுதல் தொகை மற்றும் டிபாசிட் தொகையை, 24 மணி நேரத்தில் செலுத்த தயாராக இருந்தால், அந்த ஏலதாரருக்கு டெண்டர் வழங்க தகுதியுடையவர். அதை ஏற்காமல் மனுதாரர் வழக்கு தொடர்ந்து உள்ளதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என்றார்.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

ஏலம் நடந்த நாளில் பதிவான 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்ததில், மனுதாரர் தாமாக முன்வந்து அரங்கை விட்டு வெளியேறுவது பதிவாகியுள்ளது. அவரை ஏலத்தில் பங்கேற்க விடாமல் தடுக்கப்பட்டதற்கான எந்த நிகழ்வும் பதிவாகவில்லை. மனுதாரரின் குற்றச்சாட்டுகள் தவறானவை என்பதால், அதிகபட்ச ஏலத்தை உறுதி செய்த நகராட்சி கமிஷனரின் முடிவை ரத்து செய்ய முடியாது. மனுதாரர் செலுத்திய டெண்டர் வைப்புத் தொகை ஏழு லட்சம் ரூபாயை, நான்கு வாரத்துக்குள், அவரிடம் வழங்க வேண்டும். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us