sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நிரம்புகிறது பூண்டி ஏரி; செம்பரம்பாக்கம் ஏரியில் ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு

/

நிரம்புகிறது பூண்டி ஏரி; செம்பரம்பாக்கம் ஏரியில் ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு

நிரம்புகிறது பூண்டி ஏரி; செம்பரம்பாக்கம் ஏரியில் ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு

நிரம்புகிறது பூண்டி ஏரி; செம்பரம்பாக்கம் ஏரியில் ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு

1


UPDATED : டிச 13, 2024 10:41 AM

ADDED : டிச 13, 2024 07:08 AM

Google News

UPDATED : டிச 13, 2024 10:41 AM ADDED : டிச 13, 2024 07:08 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டு வருகிறது. திருமுடிவாக்கம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், பூண்டி 34.58 சதுர கி.மீ. பரப்பளவில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர்மட்ட மொத்த உயரம் 35 அடி. இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும். நீர் இருப்பு 34.05 அடியாகவும், கொள்ளளவு 2,839 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.



அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதாலும், நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்வதாலும், நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று (டிச.,12) மாலை 5 மணியளவில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டது. இந்நிலையில், இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, தற்போது வினாடிக்கு 16,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

செம்பரம்பாக்கம் ஏரி!

கனமழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. மொத்தம் 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி 23.29 அடியை எட்டியுள்ளது. இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டு வருகிறது. திருமுடிவாக்கம், நந்தம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கக்கூடிய மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us