sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மழையை எதிர்கொள்ள தயார்; துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு!

/

மழையை எதிர்கொள்ள தயார்; துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு!

மழையை எதிர்கொள்ள தயார்; துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு!

மழையை எதிர்கொள்ள தயார்; துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு!

5


ADDED : அக் 13, 2024 12:58 PM

Google News

ADDED : அக் 13, 2024 12:58 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ' மழை நேரத்தில் அனைவரும் கரம் கோர்த்து செயல்பட்டு மக்களை காக்கும் பணியில் ஈடுபடுவோம்' என துணை முதல்வர் உதயநிதி கூறினார்.

சென்னை, ரிப்பன் மாளிகையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த கட்டளை மையத்தில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

பின்னர் நிருபர்களுக்கு உதயநிதி அளித்த பேட்டி:

சென்னையில் மழைநீர் பாதிக்கப்படும் பகுதிகளில் தன்னார்வலர்கள் உதவி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. மழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். மழை நேரத்தில் அனைவரும் கரம் கோர்த்து செயல்பட்டு மக்களை காக்கும் பணியில் ஈடுபடுவோம்.

TN-Alert செயலி

சென்னையில், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தில் 4 ஷிப்டுகளில், 150 பேர் சுழற்சி முறையில் பணியாற்றுவர். மாநகராட்சியின் சமூக வலைதளங்கள், TN-Alert செயலி மூலம் மழை தொடர்பாக அறிவிப்புகளை அறியலாம். மூடாமல் இருக்கும் கழிவுநீர் பாதைகள் பற்றித் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கலாம்;

உதவிக்கு 1913 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்களின் உயிரும், உடைமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முதன்மை நோக்கம். பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு உதயநிதி கூறினார்.






      Dinamalar
      Follow us