sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோவில் சுவரில் 'பைபிள் வாசகம்' எழுதி ஒட்டிய பாதிரியார் கைது

/

கோவில் சுவரில் 'பைபிள் வாசகம்' எழுதி ஒட்டிய பாதிரியார் கைது

கோவில் சுவரில் 'பைபிள் வாசகம்' எழுதி ஒட்டிய பாதிரியார் கைது

கோவில் சுவரில் 'பைபிள் வாசகம்' எழுதி ஒட்டிய பாதிரியார் கைது

49


ADDED : நவ 15, 2024 10:04 AM

Google News

ADDED : நவ 15, 2024 10:04 AM

49


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கச்சிராயபாளையம்: கரடிசித்துார் கிராமத்தில் உள்ள அனைத்து கோவில்களின் சுற்றுசுவர்களில் மாற்று மத வாசகங்களை எழுதிய பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் கிராமத்தில் உள்ள சிவன், பிள்ளையார், பெருமாள் உள்ளிட்ட கோவில்களின் சுற்று சுவர்களில், கடந்த 12ம் தேதி இரவு மர்ம நபர்கள் பைபிள் வாசகங்களை சார்ட் பேப்பரில் கையால் எழுதி ஒட்டி சென்றனர். அதில், சிலைகளை ஒழித்து கட்டுவோம் என எச்சரிக்கையும் விடுத்திருந்தனர். மேலும், 'பொதுமக்களுக்கு ஒரு கண்டனம்' என்ற தலைப்பில் 'இப்படிக்கு அந்நியன்' என்ற பெயரில் பல கருத்துக்களை எழுதியிருந்தனர்.

புகாரின்பேரில் கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த சந்தானம் மகன் கிறிஸ்துராஜ்,34: என்பவர், இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'கிறிஸ்துராஜ் பாதிரியார் பயிற்சி முடித்து, வீட்டின் அருகில் திருச்சபை அமைத்து, தான் சார்ந்த மதம் குறித்து பொது மக்களுக்கு போதனை செய்து வருகிறார். அப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் கோவில்களுக்கு சென்று வருகின்றனர்.

இவர் நடத்தும் திருச்சபைக்கு மக்கள் அதிகம் வராததால் ஆத்திரமடைந்த கிறிஸ்துராஜ், கடந்த மாதம் அப்பகுதி கோவில் சிலைகளை சேதபடுத்தி உள்ளார். நேற்று முன்தினம் இரவு கோவில் சுவர்களில் மதம் சார்ந்த வசனங்களை எழுதி ஒட்டி உள்ளார். அவரை கைது செய்துள்ளோம். இவ்வாறு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us