sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

8 வயது சிறுமியிடம் அத்துமீறிய பாதிரியாருக்கு 7 ஆண்டு சிறை 

/

8 வயது சிறுமியிடம் அத்துமீறிய பாதிரியாருக்கு 7 ஆண்டு சிறை 

8 வயது சிறுமியிடம் அத்துமீறிய பாதிரியாருக்கு 7 ஆண்டு சிறை 

8 வயது சிறுமியிடம் அத்துமீறிய பாதிரியாருக்கு 7 ஆண்டு சிறை 

1


ADDED : செப் 10, 2025 12:14 AM

Google News

ADDED : செப் 10, 2025 12:14 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; காப்பகத்தில் இருந்த, 8 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய பாதிரியாருக்கு திருப்பூர் மகிளா கோர்ட்டில் ஏழாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி பல்லகவுண்டம்பாளையம் அடுத்த கூனம்பட்டிப்புதுாரில், ஆதரவற்றோர் இல்லம் மற்றும் சர்ச் நடத்தி வந்தவர் ஆன்ட்ரூஸ், 48. கடந்த 2022 ம் ஆண்டு டிச., மாதம் அங்குள்ள, 8 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக அவர் அத்துமீறி நடந்துள்ளார். கடந்த 2023 ஜன., மாதம் அச்சிறுமி இது குறித்து தன் தாயிடம் தெரிவித்தார்.

அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இது குறித்து ஊத்துக்குளி போலீசில் புகார் அளித்தார். போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆன்ட்ரூஸை கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு திருப்பூர் மகிளா கோர்ட்டில், நீதிபதி கோகிலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுமியிடம் அத்துமீறிய ஆன்ட்ரூஸூக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்புக்குப் பின் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us