ஜன.,21ல் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் வருகிறார் பிரதமர் மோடி
ஜன.,21ல் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் வருகிறார் பிரதமர் மோடி
ADDED : ஜன 15, 2024 05:03 PM

திருச்சி: அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி, திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலிலும், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலும், வரும் 21ம் தேதி சுவாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அயோத்தியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம், ஜன.,22ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள ஸ்ரீரங்கமும், ராமேஸ்வரமும், ராமாயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக உள்ளன. அதனால், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்கு முன், வரும் 21ம் தேதி, விமான மூலம் திருச்சி வந்து, ஸ்ரீரங்கத்தில் ரெங்கநாதரை தரிசனம் செய்ய உள்ளதாகவும், அங்கிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமியை தரிசனம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதை முன்னிட்டு, பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரிகள், திருச்சி போலீஸ் அதிகாரிகள் ஸ்ரீரங்கம் கோவிலில் ஆய்வு மேற்கொண்டு, ஆலோசனை நடத்தினர்.