sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தீர்த்த நீராடி, ராமாயண பாராயணம் கேட்டு, ராமேஸ்வரத்தில் வழிபட்ட மோடி

/

தீர்த்த நீராடி, ராமாயண பாராயணம் கேட்டு, ராமேஸ்வரத்தில் வழிபட்ட மோடி

தீர்த்த நீராடி, ராமாயண பாராயணம் கேட்டு, ராமேஸ்வரத்தில் வழிபட்ட மோடி

தீர்த்த நீராடி, ராமாயண பாராயணம் கேட்டு, ராமேஸ்வரத்தில் வழிபட்ட மோடி

40


UPDATED : ஜன 20, 2024 10:18 PM

ADDED : ஜன 20, 2024 03:43 PM

Google News

UPDATED : ஜன 20, 2024 10:18 PM ADDED : ஜன 20, 2024 03:43 PM

40


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் பிரதமர் மோடி புனித நீராடினார். ராமநாத சுவாமி கோயிலில் ராமாயண பாராயணத்தை பிரதமர் மோடி மனமுருகி கேட்டார். முன்னதாக, மஹாலட்சுமி, காயத்ரி, யமுனா உள்ளிட்ட 22 தீர்த்தங்களில் பிரதமர் மோடி நீராடினார்.

Image 3531228திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம், பிரதமர் மோடி ராமேஸ்வரம் சென்றடைந்தார்.



பின்னர் அவர் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்ய சாலை வழியாக காரில் சென்ற போது, சாலையெங்கும் பூக்கள் தூவி பா.ஜ.,வினர் வரவேற்றனர்.Image 1221540

பேட்டரி காரில் பயணித்த மோடி

பின்னர், பிரதமர் மோடி ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில், புனித நீர் தெளித்து சுவாமி தரிசனம் செய்ய ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்றார். முன்னதாக, அக்னி தீர்த்த கடற்கரையில் பிரதமர் மோடி புனித நீராடினார்.

Image 1221544இதையடுத்து மஹாலட்சுமி, காயத்ரி, யமுனா உள்ளிட்ட 22 தீர்த்தங்களில் பிரதமர் மோடி நீராடினார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

ராமாயண பாராயணம் கேட்டார் மோடி

ராமநாத சுவாமி கோயிலில் புனித நீராடிய பின் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார். கோயில் வளாகத்தில் புதிய ஆடை அணிந்து கொண்டு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி முன் அமர்ந்து பயபக்தியுடன் மோடி சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, கோயிலில் நடைபெற்ற ராமாயணப் பாராயணம் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில், எட்டு வெவ்வேறு பாரம்பரிய மண்டலிகள் சமஸ்கிருதம், அவாதி, காஷ்மீரி, குருமுகி, அஸ்ஸாமி, பெங்காலி, மைதிலி மற்றும் குஜராத்தி ராம்கதாக்களை (ஸ்ரீராமன் அயோத்திக்குத் திரும்பிய அத்தியாயத்தை) பாராயணம் செய்தார்கள். அப்போது பிரதமர் ருத்ராட்ச மாலையை அணிந்து இருந்தார்.

Image 1221539

மோடிக்கு கை காட்டிய மூதாட்டி!

வழியெங்கும் காத்திருந்த பொதுமக்களை பார்த்து பிரதமர் மோடி கை அசைத்த படி சென்றார். கும்பிட்ட மோடிக்கு, மகிழ்ச்சியுடன் கை காட்டினார் மூதாட்டி ஒருவர். இந்த புகைப்படம் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

ஹெலிகாப்டர் சக்கரம் புதைந்தது

Image 1221558ராமேஸ்வரத்திற்கு பிரதமர் மோடி பயணம் செய்த ஹெலிகாப்டர் மாதா அமிர்தானந்த மடம் பள்ளி மைதானத்தில் தரையிறங்கிய போது ஹெலிகாப்டர் சக்கரங்கள் 8 இன்ச் தரைக்குள் புதைந்தது பிரதமருடைய பாதுகாப்பு குறைபாடு காரணமா என அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us