sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் போக்குவரத்துக்கு திட்ட மதிப்பீடு தயார்

/

ராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் போக்குவரத்துக்கு திட்ட மதிப்பீடு தயார்

ராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் போக்குவரத்துக்கு திட்ட மதிப்பீடு தயார்

ராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் போக்குவரத்துக்கு திட்ட மதிப்பீடு தயார்

1


ADDED : ஜூலை 14, 2025 12:54 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 12:54 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்து துவங்க, மாநில அரசின் சிறு துறைமுகங்கள் துறை வாயிலாக, 118 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் தனுஷ்கோடியில் இருந்து, இலங்கை தலைமன்னார் வரை, 1914 முதல் கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது. கடந்த 1964ம் ஆண்டு வீசிய கடுமையான புயல் காரணமாக, தனுஷ்கோடி கடலுக்குள் மூழ்கியது.

ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையிலான கப்பல் போக்குவரத்து, இலங்கை போர் காரணமாக, 1984ம் ஆண்டு மத்திய அரசால் நிறுத்தப்பட்டது.

ரயில் வசதி


அதன்பின், கப்பல் போக்குவரத்து துவக்கப்படவில்லை. ராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னாருக்கு கப்பலில் ஒரு மணி நேரத்திற்குள் சென்று விட முடியும். அங்கிருந்து இலங்கை தலைநகர் கொழும்பு செல்ல, ரயில் வசதி உள்ளது.

இதனால், விமானப் பயணச் செலவு பெருமளவு குறையும். எனவே, ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தை துவக்க, தமிழக சிறு துறைமுகங்கள் துறையின் கீழ் இயங்கும், தமிழக கடல்சார் வாரியம் வாயிலாக திட்டமிடப்பட்டு உள்ளது.

இதற்காக, 118 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இதனால், அடுத்த கட்ட பணிகள் துவங்குவதில் இழுபறி நீடித்து வருகிறது.

சீரமைப்பு


இது குறித்து, மாநில சிறு துறைமுகங்கள் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் இயக்க, ராமேஸ்வரம், தலைமன்னார் துறைமுகங்களை சீரமைக்க வேண்டும். ராமேஸ்வரம் துறைமுகத்தை சீரமைக்க, 6.24 கோடி ரூபாயில் மத்திய அரசு வாயிலாக பணிகள் நடந்து வருகின்றன.

தலைமன்னார் துறைமுகத்தை அம்மாநில அரசு இன்னும் மேம்படுத்தவில்லை. இதனால், மத்திய அரசு தாமதம் செய்து வருகிறது. மேலும், மத்திய அரசு வாயிலாக இத்திட்டத்தை சாகர்மாலா திட்டத்தின் கீழ் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

எனவே, திட்ட மதிப்பீடு தயாரித்தும், அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us