UPDATED : ஜன 17, 2024 06:11 AM
ADDED : ஜன 17, 2024 06:10 AM

''ரெய்டுல சிக்கியவருக்காக, பெண் அதிகாரியை, 'டம்மி' ஆக்கிட்டாங்க...'' என, கடைசி தகவலுக்கு மாறிய அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''சென்னை மண்டல நீர்வளத் துறையில், கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதி செயற்பொறியாளரா இருந்தவர் பொதுப்பணி திலகம்... மணல் குவாரி முறைகேடு தொடர்பா, இவரது வீடு மற்றும் அலுவலகங்கள்ல, அமலாக்கத்துறை ரெய்டு நடந்துச்சுங்க...
''அவரை அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்துக்கு அழைச்சு, விசாரணையும் நடத்துனாங்க... இவருக்கு இப்ப, இணை தலைமை பொறியாளர் பதவி உயர்வு குடுத்திருக்காங்க...
''முதல்ல, கண்காணிப்பு பொறியாளரா அவரை கொஞ்ச காலம் பணிபுரிய விட்டு, அப்புறமா தான், இணை தலைமை பதவி உயர்வு தரணும்... ஆனா, இவருக்கு நேரடியா இணை தலைமை பதவியை துாக்கி குடுத்துட்டாங்க...
![]() |
''இதுக்காகவே, இணை தலைமை பொறியாளரா இருந்த ராணி என்ற பெண் அதிகாரியை, தரமணியில் உள்ள நீர்வளத் துறை அலுவலகத்துக்கு, 'டம்மி' பதவிக்கு மாத்திட்டாங்க... 'இன்னும் மூணு மாசத்துல ராணி ஓய்வு பெற இருக்கிற சூழல்ல, அவங்களை அங்க மாத்தியிருக்கிறது, பொறியாளர்கள் மத்தியில புகைச்சலை ஏற்படுத்தி இருக்குதுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.


