sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

/

வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு

வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு


ADDED : அக் 06, 2024 11:41 PM

Google News

ADDED : அக் 06, 2024 11:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் பலருக்கு கடந்த மாத சம்பளம் வழங்காமல் தாமதப்படுத்துவதை கண்டித்து அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல்லில் சங்க மாநில தலைவர் ராஜ்குமார் கூறியதாவது: பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் மாநில திட்ட இயக்குநர், கூடுதல் மாநில திட்ட இயக்குநர், இணை இயக்குநர், மாநில மாவட்ட திட்ட அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், இயன்முறை மருத்துவர்கள், மாவட்ட வட்டார கிராமக்கல்விக்குழு கணக்காளர்கள், கட்டடவியல் பொறியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், கணினி வகைப்படுத்துவர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், பகல் நேர பாதுகாப்பு மைய பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என 32,500 பேர் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவருக்கும் செப்டம்பர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை.

மாத சம்பளத்தை உடனடியாக வழங்கிடவும், வரும் காலங்களில் சம்பளத்தை அம்மாதத்தின் இறுதி வேலை நாட்களில் வழங்கிட கோரியும் நாளை (அக்., 8) தமிழகம் முழுவதும் கலெக்டரிடம் மனு அளிப்பதுடன் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us