sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெண் ஆபாச படங்கள் பகிர்ந்த நபருக்கு 'காப்பு'

/

பெண் ஆபாச படங்கள் பகிர்ந்த நபருக்கு 'காப்பு'

பெண் ஆபாச படங்கள் பகிர்ந்த நபருக்கு 'காப்பு'

பெண் ஆபாச படங்கள் பகிர்ந்த நபருக்கு 'காப்பு'


ADDED : பிப் 12, 2024 06:04 AM

Google News

ADDED : பிப் 12, 2024 06:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியைச் சேர்ந்த 50 வயது பெண் செவிலியர், உடல் நலம் குன்றியவர்கள் வீடுகளுக்கு சென்று மருத்துவம் பார்க்கும் ஊழியர்களை நியமித்து, தனி அலுவலகம் நடத்தி வருகிறார். இவர் மறுமணத்திற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தார்.

அப்போது, புதுக்கோட்டை தனசேகரன், 57, அறிமுகம் கிடைத்தது. தனசேகரன் தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதாகவும், பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார்.

நம்பிய பெண், புதுக்கோட்டையில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு எடுத்து ஓராண்டாக வாழ்ந்தார். சில மாதங்களில், அவரது முன்னாள் மனைவி குடும்பத்தினர் பிரச்னை செய்தனர்.

அப்போது தான், தனசேகரன் மனைவியை விவாகரத்து செய்யவில்லை என தெரிய வந்தது. மேலும் சில பெண்கள், தனசேகரன் ஏமாற்றி விட்டதாக பிரச்னை செய்தனர்.

தனசேகரனுக்கு நிறைய பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால், புதுச்சேரி பெண் அவரை பிரிந்தார்.

ஆனால், தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு தனசேகரன், பெண்ணுக்கு நெருக்கடி கொடுத்தார். அவர், மறுக்கவே ஆத்திரமடைந்த தனசேகரன், தனிமையில் எடுத்த அந்தரங்க படங்களை பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பி மிரட்டினார்.

இணையதளத்திலும் படங்களை வெளியிட்டார். புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார், தனசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us