அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம்: வி.எச்.பி.,
அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம்: வி.எச்.பி.,
ADDED : ஏப் 16, 2025 05:27 AM

விழுப்புரம் : அமைச்சர் பொன்முடி, பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வரை, விஸ்வ ஹிந்து பரிஷத் போராட்டம் தொடரும் என, மாநில பொதுச்செயலர் பாலமணிமாறன் கூறினார்.
விழுப்புரத்தில் அவர் அளித்த பேட்டி: அமைச்சர் பொன்முடியின் பேச்சு காணொளியில் வந்ததும், விஸ்வ ஹிந்து பரிஷத் உடனடியாக இரண்டு அறிக்கையை வெளியிட்டது. அவர், அமைச்சர் பதவியில் இருந்து, உடனே நீக்கப்பட வேண்டும்; பகிரங்கமாக மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டது.
உடனே, அவர் கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ஏனென்றால், அவர் பேசிய பேச்சுகள் விவரிக்க இயலாதவை.
![]() |
ஒவ்வொரு ஹிந்துவையும், பெண்களையும் புண்படுத்த கூடியதாகும். அவர், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படும் வரை, பகிரங்கமாக மன்னிப்பு கேட்கும் வரை எங்கள் போராட்டம் தமிழக முழுதும் தொடரும். இவ்வாறு பாலமணிமாறன் கூறினார்.


