சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன தெரியுமா
சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன தெரியுமா
ADDED : மே 07, 2024 02:06 PM

சென்னை: சென்னை மாநகராட்சி பூங்காவிற்குள் வளர்ப்பு நாய்களுக்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடிக் கொண்டு இருந்த சிறுமியை, ‛ராட்வைலர்' ரக நாய்கள் கடித்துக் குதறியது. இதில் ஆபத்தான நிலையில் அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், மாநகராட்சி பூங்காக்களுக்குள் அனுமதிக்கப்படும் நாய்கள் தொடர்பான விதிமுறைகளை பூங்கா கண்காணிப்பாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பி வைத்து உள்ளது.
இதன்படி,* கழுத்தில் சங்கிலி போட்டும், வாயை மூடியும் அழைத்து வரப்பட வேண்டும்.
* உரிமம் பெற்ற, தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே அனுமதி
* ஒரு நபர், ஒரு வளர்ப்பு நாயை மட்டுமே அழைத்து வர வேண்டும்
* பூங்காவிற்குள் குழந்தைகள் விளையாடும் இடத்தில் நாய்களுக்கு அனுமதி இல்லை
* வழிகாட்டுதல்கள் அனைத்தையும் பூங்கா காவலர்கள் தீவிரமாக கண்காணித்து அமல்படுத்த வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.