பொங்கல் களை கட்டியது: புத்தாண்டில் முதல் ஜல்லிக்கட்டு
பொங்கல் களை கட்டியது: புத்தாண்டில் முதல் ஜல்லிக்கட்டு
UPDATED : ஜன 06, 2024 09:22 AM
ADDED : ஜன 06, 2024 09:10 AM

புதுக்கோட்டை: இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை தச்சங்குறிச்சியில் உற்சாகமாக துவங்கியது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் ஜனவரி மாதம் நடத்தப்படும். புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியது. போட்டியை காண பொதுமக்களும் குவிந்துள்ளனர். மருத்துவக் குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சீறிப்பாயும் காளைகள்
புதுக்கோட்டை, திருச்சி ,மதுரை, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, இராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களில் இருந்து 750க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள வந்துள்ளது. போட்டியினை தமிழக சட்டதுறை அமைச்சர் ரகுபதி, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
வெற்றி பெற்ற காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பைக், மிக்ஸி கிரைண்டர், சேர் என ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. மொத்தம் பத்து சுற்றுகளாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் ஒரு சுற்றிக்கு 30 பேர் என மொத்தம் 300பேர் கலந்து கொள்வார்கள் என கமிட்டியாளர்கள் தெரிவித்துள்ளனர்.