ரூ.31.28 லட்சத்துக்கு வெல்லம் பழநி கோயில் கொள்முதல்
ரூ.31.28 லட்சத்துக்கு வெல்லம் பழநி கோயில் கொள்முதல்
ADDED : ஆக 10, 2025 01:52 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாட்டு சர்க்கரை, வெல்லம் விற்பனை நடந்தது.
விவசாயிகள், 2,868 மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 60 கிலோ எடை கொண்ட முதல் தரம் நாட்டு சர்க்கரை, 2,895 முதல், 3,000 ரூபாய் வரையிலும், இரண்டாம் தரம், 2,700 முதல், 2,790 ரூபாய் வரையிலும் விற்பனையானது. மொத்தம், 67,380 கிலோ எடையுள்ள நாட்டு சர்க்கரை, 30 லட்சத்து, 96 ஆயிரத்து, 450 ரூபாய்க்கு விற்பனையானது.
அதுபோல உருண்டை வெல்லம், 30 கிலோ சிப்பம், 1,620 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 600 கிலோ எடை கொண்ட உருண்டை வெல்லம், 32,400 ரூபாய்க்கு விற்பனையானது.
கரும்பு சர்க்கரை, உருண்டை வெல்லம் சேர்ந்து, 31 லட்சத்து, 28 ஆயிரத்து, 850 ரூபாய்க்கு பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிர்வாகம் சார்பில் கொள்முதல் செய்துள்ளனர்.