sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம்; காங்., செயற்குழு கூட்டத்தில் ராகுல் பேச்சு

/

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம்; காங்., செயற்குழு கூட்டத்தில் ராகுல் பேச்சு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம்; காங்., செயற்குழு கூட்டத்தில் ராகுல் பேச்சு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம்; காங்., செயற்குழு கூட்டத்தில் ராகுல் பேச்சு

7


ADDED : ஏப் 09, 2025 08:33 PM

Google News

ADDED : ஏப் 09, 2025 08:33 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆமதாத்பாத்: ''ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம் கொண்டு வர வேண்டும்'' என காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் பேசினார்.

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம், குஜராத் மாநிலம் ஆமதாபாதில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் தேசிய நினைவிடத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடி ஜாதிவாரி கணக்கெடுப்பை வேண்டுமென்றே எதிர்க்கிறார்.

நாட்டின் மக்கள் தொகையில் சிறுபான்மையினரின் பங்கை அவர்கள் வெளியிட விரும்பவில்லை. தெலுங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி ஒரு புரட்சிகரமான நடவடிக்கையை நாங்கள் எடுத்தோம். அதற்கு சில மாதங்களுக்கு முன்பு, நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நான் பார்லிமென்டில் பிரதமர் மோடியிடம் கேட்டு இருந்தேன்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சட்டம் கொண்டு வர வேண்டும். தெலுங்கானா என்ன செய்ததோ, அதை நாங்கள் நாடு முழுவதும் செய்யப் போகிறோம். வக்ப் திருத்த சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இது மத சுதந்திரத்தின் மீதான தாக்குதல். வக்ப் திருத்த சட்ட மசோதா கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் போன்ற பிற சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும். இவ்வாறு ராகுல் பேசினார்.






      Dinamalar
      Follow us