ADDED : மார் 07, 2026 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கோட்டத்தின் ரயில்வே கூடுதல் மேலாளர் (ஏ.டி.ஆர்.எம்.,) எல்.என்.ராவ், மார்ச் 31 உடன் பணி நிறைவு பெறுகிறார்.
இதையடுத்து, தென்கிழக்கு ரயில்வேயில் தற்போது முதுநிலை நிர்வாக நிலை அதிகாரியாக பணிபுரிந்து வரும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பிரசன்னாவை, மதுரை கோட்டத்தின் ஏ.டி.ஆர்.எம்., ஆக நியமித்து ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ஏப்., முதல் வாரத்தில் பதவி ஏற்க உள்ள இவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் மதுரை கோட்டத்தில் இயக்கம், கமர்ஷியல் பிரிவுகளில் முதுநிலை மேலாளராக பணிபுரிந்துள்ளார்.

