sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரயில்வே லோகோ பைலட் தேர்வு; தமிழக தேர்வர்கள் அலைக்கழிப்பு

/

ரயில்வே லோகோ பைலட் தேர்வு; தமிழக தேர்வர்கள் அலைக்கழிப்பு

ரயில்வே லோகோ பைலட் தேர்வு; தமிழக தேர்வர்கள் அலைக்கழிப்பு

ரயில்வே லோகோ பைலட் தேர்வு; தமிழக தேர்வர்கள் அலைக்கழிப்பு

7


ADDED : மார் 20, 2025 05:07 AM

Google News

ADDED : மார் 20, 2025 05:07 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இறுதி கட்டத்தில் தொழில்நுட்பக் கோளாறால், ரயில்வே லோகோ பைலட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால், தேர்வர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

ரயில்வே தேர்வு வாரியத்தால், லோகோ பைலட் காலிப் பணியிடங்களுக்கான சி.பி.டி., தேர்வு, நேற்று நடப்பதாக இருந்தது. தமிழக தேர்வர்களுக்கு, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன. அதை மாற்ற கோரிக்கைகள் விடப்பட்டன. ஆனால், தேர்வு மையங்களை, உடனடியாக தமிழகத்தில் வழங்க முடியாது என, ரயில்வே மறுத்து விட்டது.

இந்நிலையில், நேற்று நடப்பதாக இருந்த தேர்வு, தொழில்நுட்ப காரணங்களால் ஒத்திவைக்கப்படுவதாக, ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்தது. தேர்வர்களுக்கு இந்த தகவல், தேர்வு மையங்களுக்கு சென்ற பின்னரே கிடைத்தது. இதனால், தேர்வர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

தேர்வர்கள் செலவு செய்த தொகையை, இழப்பீட்டுத் தொகையாக ரயில்வே வாரியம் வழங்க வேண்டும், அறிவிக்கப்பட உள்ள தேர்வு மையங்களை தமிழகத்திலேயே ஒதுக்க வேண்டும் என, தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us