ADDED : ஆக 27, 2025 10:50 PM
சென்னை:'வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலு பெற்றுள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங் களில் தீவிரமாக உள்ளது. நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம், பந்த லுாரில் 4 செ.மீ., மழை பெய்துள்ளது.
வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலு பெற்று உள்ளது. இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்று முதல் செப்., 2 வரை, சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்.
நீலகிரி, கோவை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசும். சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்ன லுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

