ADDED : நவ 30, 2024 10:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் 172 இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளதாக மாநகராட்சி கூறியுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னையில் 553 இடங்களில் மழைநீர் தேங்கியது. இதில் 172 இடங்களில் அகற்றப்பட்டன. 381 இடங்களில் தேங்கி உள்ளது. 99 இடங்களில் விழுந்த மரங்கள் முழுமையாக அகற்றப்பட்டன. சென்னையில் 6 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.