sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வன்னியர் என்பதாலேயே ராஜேந்திரன் அமைச்சர்: பா.ம.க.,

/

வன்னியர் என்பதாலேயே ராஜேந்திரன் அமைச்சர்: பா.ம.க.,

வன்னியர் என்பதாலேயே ராஜேந்திரன் அமைச்சர்: பா.ம.க.,

வன்னியர் என்பதாலேயே ராஜேந்திரன் அமைச்சர்: பா.ம.க.,


ADDED : ஜன 30, 2025 01:10 AM

Google News

ADDED : ஜன 30, 2025 01:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'வன்னியர்களுக்கு துரோகம் இழைக்க நினைக்கக்கூடாது' என அமைச்சர் ராஜேந்திரனுக்கு, பா.ம.க., செய்தித் தொடர்பாளர் பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழக வரலாற்றில், வன்னியர்களுக்கு மிக அதிக துரோகம் செய்தது முதல்வர் ஸ்டாலின் தான் என்ற உண்மையை, பா.ம.க., தலைவர் அன்புமணி அம்பலப்படுத்தினார்.

இதை அறிவாலய அடிமைகள் பட்டியலில், புதிதாக இணைந்திருக்கும் அமைச்சர் ராஜேந்திரனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

கடந்த 2019 அக்., 7ம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கொடுத்த வாக்குறுதியின்படி, வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் மணிமண்டபம் அமைத்துள்ளார் என, அமைச்சர் ராஜேந்திரன் சிலாகித்துப் பேசியிருக்கிறார்.

அமைச்சர் ராஜேந்திரன் சுட்டிக்காட்டும் அதே விக்கிரவாண்டி பிரசாரத்தில், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று, ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து நான்காண்டுகளாகியும் இட ஒதுக்கீடு வழங்கவில்லை.

வீரபாண்டி ஆறுமுகம் இருந்திருந்தால், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதை கண்டு சீறி எழுந்திருப்பார். அவருக்கு அஞ்சி, முதல்வர் ஸ்டாலின் இட ஒதுக்கீடு வழங்கியிருப்பார்.

ஆனால், அமைச்சர் ராஜேந்திரனால் அது முடியாது. வீரபாண்டி ஆறுமுகத்தை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, தி.மு.க.,வின் இன்றைய தலைமையால் நஞ்சூட்டி வளர்க்கப்பட்டவர்தான் ராஜேந்திரன்.

பெரும்பான்மை வன்னியர் சமுதாயத்திற்கு, அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதை, பா.ம.க., நிறுவனர் ராமதாசும், தலைவர் அன்புமணியும் புள்ளிவிபரங்களுடன் அம்பலப்படுத்தினர்.

அதை தொடர்ந்து தான் ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. அதற்காக, அவர்களுக்கு ராஜேந்திரன் நன்றிக்கடன் செலுத்த வேண்டும்.

சுற்றுலா துறையில் வித்தகர் என்பதற்காக, ராஜேந்திரனுக்கு சுற்றுலா துறை அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. அவர் ஒரு வன்னியர் என்பதற்காகவே, அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதை மறந்து, அச்சமூகத்திற்கு துரோகம் இழைக்க நினைக்கக்கூடாது.

அந்த இனத்திற்குரிய அடிப்படை குணங்கள் ஏதேனும் அவருக்கு இருந்தால், 'அமைச்சரவை கூட்டத்தில் வன்னியர் இட ஒதுக்கீட்டை இன்னும் ஏன் வழங்கவில்லை' என்று கேள்வி எழுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us