அரசியல் கேள்விக்கு பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆன ரஜினி
அரசியல் கேள்விக்கு பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆன ரஜினி
ADDED : பிப் 10, 2024 12:03 PM

சென்னை: ‛‛தன்னிடம் அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம்'' என சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினி கூறினார்.
படப்பிடிப்புக்கு செல்லும் போதும், சென்னை திரும்பும் போதும் விமான நிலையத்தில் நடிகர் ரஜினி பத்திரிகை நிருபர்களை சந்திப்பார். அப்போது அவரிடம் அரசியல் ரீதியிலும், சினிமா ரீதியிலும் கேள்விகள் கேட்கப்படும். அரசியல் தொடர்பான கேள்விகளுக்கு ரஜினி அளிக்கும் பதில் அவ்வபோது பரபரப்பையும், சமூக வலைதளங்களில் விவாதத்தையும் ஏற்படுத்துவது உண்டு.
சில நாட்களுக்கு முன்னர், ரஜினியிடம், ‛‛ நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி '' குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ஒரே வரியில் வாழ்த்துகள் என பதிலளித்து விட்டு சென்றார்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை ரஜினி சந்தித்தார். அப்போது, அவரிடம் நடிகர் விஜய், விஷால் அரசியல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரஜினி, ‛‛ அரசியல் ரீதியில் தன்னிடம் கேள்வி கேட்க வேண்டாம்'' என்றார். மேலும், லால் சலாம் படம் பெரும் வெற்றி அடைந்ததாகவும், வேட்டையன் படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும் கூறினார்.