ADDED : ஏப் 13, 2024 05:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் பிரசாரம் செய்ய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 16ம் தேதி தமிழகம் வர உள்ளார்.
கடந்த வாரம் இரண்டு நாட்கள் பயணமாக தமிழகம் வந்த ராஜ்நாத் சிங், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
இந்நிலையில் வரும் 16ம் தேதி ராஜ்நாத் சிங் மீண்டும் தமிழகம் வர உள்ளார். அப்போது, ஈரோடு, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.

