sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரம்ஜான் சிந்தனைகள்-18

/

ரம்ஜான் சிந்தனைகள்-18

ரம்ஜான் சிந்தனைகள்-18

ரம்ஜான் சிந்தனைகள்-18


ADDED : மார் 18, 2025 06:38 PM

Google News

ADDED : மார் 18, 2025 06:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாங்கோசை கேட்டால்...

பள்ளிவாசலில் தொழுகைக்கு பாங்கு சொல்லி அழைப்பு விடுக்கிறார்கள். இதன் மூலம் பல நன்மைகளை பெறலாம்.

* கியாமநாளில் மக்கள் துன்பத்தில் உழலும் போது, பாங்கு சொன்னவர்கள் கஸ்துாரி மணம் கமழும் மேடைகளில் அமர்ந்திருப்பர்.

* பெண்களே! நீங்கள் பாங்கு சொல்லும் சப்தத்தைக் கேட்டால், பாங்கு சொல்பவர் போல் நீங்களும் சொல்லுங்கள்.

* பாங்கு சொல்பவரின் குரல் கேட்கும் துாரத்தில் இருக்கும் ஜின்னும், மனிதனும் கியாமநாளில் அவருக்காக சாட்சி சொல்வார்கள்.

* பாங்கு சொல்பவர் கியாமநாளில் கழுத்து அதிகம் நீண்டவராக இருப்பார்.

* ஒருவர் 12 ஆண்டுகள் பாங்கு சொன்னால், அவருக்கு சுவர்க்கம் நிச்சயம் உண்டு. மேலும் ஒவ்வொரு நாளும் அவருக்கு அறுபது நன்மைகள் பதிவு செய்யப்படுகிறது.

* பாங்கோசை கேட்டு எவர் பேசுகிறாரோ, அவருக்கு மரண வேளையில் கலிமா நாவில் வர தடையாக இருக்கும்.

* பாங்கு, தல்பியா சொல்பவரும் மண்ணறைகளில் இருந்து வெளியேறும்போது, பாங்கு சொல்பவர் பாங்கு கூறிக்கொண்டும் தல்பியா சொல்பவர் தல்பியா சொல்லிக் கொண்டும் வருவார்கள்.

* தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டதும் பாங்கைக் கேட்கக் கூடாது என்பதற்காக ஷைத்தான் ஓடுகிறான்.

இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:52 மணி






      Dinamalar
      Follow us