ADDED : மார் 14, 2024 06:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிம்மதியாக வாழ்பவர் யார் என்பதை சொல்கிறார் நபிகள் நாயகம்.
* பிறருக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என வழிபடுபவர் நிம்மதியுடன் வாழ்வர். பிறரை நேசிக்கும் இவர்கள், மற்றவரின் துன்பத்தைக் கண்டு இரங்குவதால் இறையருளைப் பெறுவர். ஆனால் தான் மட்டுமே வாழ வேண்டும் என சுயநலத்துடன் இருப்போரை அவன் கைவிடுவான்.
* நன்கு யோசித்து ஒரு செயலில் ஈடுபடுபவர்கள் துன்பத்திற்கு ஆளாவதில்லை. ஆனால் பலர் யோசிக்காமல் ஆடம்பரமான, வீணான விஷயங்களில் ஈடுபட்டு துன்பத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக பண விஷயத்தில் நெருக்கடியைத் தவிர்க்க சிக்கனமாக செலவழிக்க வேண்டும்.
* இரு குடும்பங்களில் பிரச்னை ஏற்பட்டால் நடுநிலையுடன் பேசுங்கள்.
இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:55 மணி

