ADDED : செப் 29, 2024 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
விழுப்புரம் மாவட்டம், கெங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மோகன்ராஜ் என்பவர் நிலத்தை தனிநபர் அபகரிக்க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆதரவுடன் நடந்த முயற்சிகளால் மனம் உடைந்து, மேல்மலையனுார் தாசில்தார் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தனிநபர் ஒருவரின் நில அபகரிப்புக்கு ஆதரவாக களமிறங்கி, 33 வயது ஏழை விவசாயியின் தற்கொலைக்கு காரணமாகியிருப்பது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.