ADDED : பிப் 20, 2025 02:17 AM
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் புறப்பாடாகி கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருள உள்ளதால் இன்று(பிப்.20) முழுவதும் கோயில் நடை அடைக்கப்பட உள்ளது.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா பிப்.,18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 3ம் நாள் விழாவான இன்று அதிகாலை 2:30 முதல் 3:00 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடக்கும். இதனைத் தொடர்ந்து கால பூஜை, சாயரட்ச பூஜை நடந்ததும் காலை 7:00 மணிக்கு சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருள்வர்.அங்கு மகா தீபாராதனை முடிந்ததும் இரவு 10:00 மணிக்கு சுவாமி, அம்மன் கோயிலுக்கு திரும்புவார்கள். இதனால் காலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை கோயில் நடை அடைக்கப்படும் என கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்தார்.