sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ராமநாதபுரம் சரணாலயங்களில் குவியும் வெளிநாட்டு பறவைகள்; கணக்கெடுப்பில் தகவல்

/

ராமநாதபுரம் சரணாலயங்களில் குவியும் வெளிநாட்டு பறவைகள்; கணக்கெடுப்பில் தகவல்

ராமநாதபுரம் சரணாலயங்களில் குவியும் வெளிநாட்டு பறவைகள்; கணக்கெடுப்பில் தகவல்

ராமநாதபுரம் சரணாலயங்களில் குவியும் வெளிநாட்டு பறவைகள்; கணக்கெடுப்பில் தகவல்

1


ADDED : மார் 09, 2025 04:27 PM

Google News

ADDED : மார் 09, 2025 04:27 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்; ராமநாதபுரம் வனத்துறை சார்பில் சரணாலயங்கள், நீர்நிலைகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கடந்த ஆண்டுகளை விட இந்த சீசனில் அதிகளவில் வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளது கண்டறியப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சித்திரங்குடி, தேர்த்தங்கல், காஞ்சிரங்குளம், சக்கரக்கோட்டை, மேலச்செல்வனூர் ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயங்களில் நேற்று(மார்ச் 8) இரவு தொடங்கி இன்று (மார்ச் 9) மதியம் வரை பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த கணக்கெடுப்பில் ராமநாதபுரம் வன உயிரின காப்பாளர் முருகன், ராமநாதபுரம் வனசரகர், சென்னை, மதுரை சேர்ந்த பறவைகள் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் என 70க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

கணக்கெடுப்பின் போது சரணாலயங்கள் மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள நீர்நிலைகளில் பறவைகள் அதிகளவு கண்டறியப்பட்டுள்ளது. சிக்கல் பகுதியில் உள்ள கண்மாய்களில் பிளமிங்கோ மற்றும் மல்லல், ஆர்.எஸ். மங்கலம், உத்தரகோச மங்கை, கண்மாய்களில் அதிகமான வலசை வந்துள்ள வெளிநாட்டு பறவைகள் கணக்கிடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 75 சதவீத கண்மாய்களில் தண்ணீர் உள்ளதால் இரண்டு, மூன்று முறை பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக பறவைகள் கணகெடுப்பில் ஈடுபட்ட பறவைகள் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

நத்தை கொத்தி நாரை, கூழைக்கிடா, மஞ்சள் மூக்கு நாரை, நீர்க்காகங்கள் கொக்குகள் உள்ளிட்டவைகள் அதிகரித்து உள்ளதாகவும், இந்தாண்டு கணகெடுப்பில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் காணப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வலசை பறவையான சென்ட் வாத்து கடந்த ஆண்டுகளில் 50க்கும் குறைவான எண்ணிக்கையில் தேர்த்தாங்கள் சரணாலயத்திற்கு வந்திருந்தது. ஆனால் இன்று எடுத்த கணக்கெடுப்பில் 2000க்கும் மேற்பட்ட சென்ட் வாத்துகள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வலசை பறவைகள் வலசை வருவது கால தாமதமாக தொடங்கினாலும் வரத்து அதிகரித்துள்ளதாகவும், இந்த ஆண்டு கூடுதல் நாட்கள் தங்கி இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பு இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us