sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 கையெழுத்து பெற்றும் ரேஷன் வழங்கலாம்; தாயுமானவர் திட்டத்தில் சலுகை

/

 கையெழுத்து பெற்றும் ரேஷன் வழங்கலாம்; தாயுமானவர் திட்டத்தில் சலுகை

 கையெழுத்து பெற்றும் ரேஷன் வழங்கலாம்; தாயுமானவர் திட்டத்தில் சலுகை

 கையெழுத்து பெற்றும் ரேஷன் வழங்கலாம்; தாயுமானவர் திட்டத்தில் சலுகை

5


ADDED : டிச 24, 2025 05:46 AM

Google News

5

ADDED : டிச 24, 2025 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை வழங்கும்போது முதியோரிடம் கையெழுத்து பெற்றும் வழங்கலாம் என உணவு பொருள் வழங்கல் துறை இயக்குனர் சிவராசு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு அவர்களது வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வினியோகம் செய்து வருகின்றனர். இதில் அக்குடும்ப தலைவரின் கைவிரல் ரேகை மற்றும் கண் கருவிழி சரிபார்ப்பு முறைப்படி பதிவேற்றம் செய்து, விற்பனையாளர்கள் மாதத்தில் இரண்டு நாட்கள் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கி வருகின்றனர்.

ரேஷன் விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 4 ஜி., சர்வர் அடிக்கடி பழுதாவதும், செயல்படாமல் போவதால், கைவிரல் ரேகை, கண் கருவிழி சரிபார்ப்பதில் சிரமம் ஏற்படுவதாக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் கூறியது.

இதையடுத்து இத்திட்டத்தில் ரேஷன் பொருட்கள் பெறும் முதியோர், மாற்றுத்திறனாளிகளின் கைரேகை, கண் கருவிழி பதிவாகவில்லை எனில், உரிய பதிவேட்டில் கையெழுத்து மட்டும் பெற்றுக்கொண்டு ரேஷன் பொருட்களை தடையின்றி விடுவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us