sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'சர்வர்' வேகம் குறைவால் ரேஷன் கடைகள் திணறல்

/

'சர்வர்' வேகம் குறைவால் ரேஷன் கடைகள் திணறல்

'சர்வர்' வேகம் குறைவால் ரேஷன் கடைகள் திணறல்

'சர்வர்' வேகம் குறைவால் ரேஷன் கடைகள் திணறல்

3


ADDED : மே 13, 2025 03:49 AM

Google News

ADDED : மே 13, 2025 03:49 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில், 'சர்வர்' பிரச்னையால், 'பாயின்ட் ஆப் சேல்' எனப்படும், விற்பனை முனைய கருவி வேகமாக செயல்படாததால், ஒரு மணி நேரத்தில், ஐந்து கார்டுதாரர்களுக்கு கூட பொருட்கள் வழங்க முடியவில்லை.

இதனால், கடை ஊழியர்களும், கார்டு தாரர்களும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

தொடர்கதையாகி வரும் இந்த பிரச்னையில், உயரதிகாரிகள் கவனம் செலுத்தி தீர்வு காண, ரேஷன் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலர் தினேஷ்குமார் கூறியதாவது:

தமிழகம் முழுதும் ரேஷன் கடைகளில், பி.ஓ.எஸ்., கருவிகள் வேகமாக வேலை செய்வதில்லை. தொழில்நுட்ப கோளாறுகள் அடிக்கடி ஏற்படுகின்றன.

விரல் ரேகையை, 'ஸ்கேன்' செய்வதற்கு அதிக நேரமாகிறது. ஒரு மணி நேரத்திற்கு, 20 கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், கருவியின் வேகம் குறைவால் தற்போது, ஐந்து பேருக்கு கூட வழங்க முடியாவில்லை.

இதனால், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். அவர்கள், ஊழியர்கள் மீது தங்களின் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். இதற்கு அரசு தீர்வு காண, வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us