ADDED : செப் 09, 2025 03:02 AM

சென்னை : தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளை, உணவு துறையும், கூட்டுறவு துறையும் நடத்துகின்றன .
இந்த கடைகளை, ஒரே துறையின் கீழ் கொண்டு வருவது, ஊதிய உயர்வு வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ரேஷன் கடை ஊழியர்கள், வரும், 12ம் தேதி, சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர் .
அவர்களுடன், சென்னையில் நேற்று, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நந்தகுமார், கூடுதல் பதிவாளர் அம்ரித் பேச்சு நடத்தினர்; இதில், உடன்பாடு ஏற்படவில்லை.
இதுகுறித்து, ரேஷன் கடை பணியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன், பொதுச்செயலர் தினேஷ்குமார் கூறியதாவது:
வரும், 12ம் தேதி திட்டமிட்டபடி, சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். ஊதிய உயர்வு வழங்கப்படும் வரை, இடைக்கால நிவாரணமாக மாதம், 3,000 ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.