3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்; 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!
3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்; 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்!
ADDED : டிச 01, 2024 02:24 PM

சென்னை: தமிழகத்தில் இன்று (டிச.,01) 3 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரிக்கு இன்று (டிச.,01) ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை (டிச.,02)
நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாளை தேனி, மதுரை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

