sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 இன்ஸ்பெக்டருக்கு பணியிடம் ஒதுக்க மறுப்பு

/

 இன்ஸ்பெக்டருக்கு பணியிடம் ஒதுக்க மறுப்பு

 இன்ஸ்பெக்டருக்கு பணியிடம் ஒதுக்க மறுப்பு

 இன்ஸ்பெக்டருக்கு பணியிடம் ஒதுக்க மறுப்பு


ADDED : ஜன 22, 2026 02:04 AM

Google News

ADDED : ஜன 22, 2026 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கரூரில், 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகளின் விசாரணையில் உள்ள, கரூர் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

கரூரில் கடந்தாண்டு செப்., 27ல், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அவர்களின் விசாரணையில், கரூர் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் உள்ளார்.

அவர் மீது, த.வெ.க., தரப்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளன.

அதுதொடர்பாக, மணிவண்ணனிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் ஐந்து முறை விசாரணை நடத்தி உள்ளனர். எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் வர வேண்டும் என்றும், அவருக்கு உத்தர விட்டுள்ளனர்.

இந்நிலையில், காத்திருப்போர் பட்டியலுக்கு மணிவண்ணன் மாற்றப்பட்டுள்ளார்.

அவருடன், 58 இன்ஸ்பெக்டர்களும், புதுக்கோட்டை, கரூர், அரியலுார் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை, மத்திய மண்டல ஐ.ஜி., பாலகிருஷ்ணன் பிறப்பித்து உள்ளார்.






      Dinamalar
      Follow us