sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கார் குண்டு வெடிப்பில் கைதானவர்களின் உறவினர்கள் சிறை முன் ஆர்ப்பாட்டம்

/

கார் குண்டு வெடிப்பில் கைதானவர்களின் உறவினர்கள் சிறை முன் ஆர்ப்பாட்டம்

கார் குண்டு வெடிப்பில் கைதானவர்களின் உறவினர்கள் சிறை முன் ஆர்ப்பாட்டம்

கார் குண்டு வெடிப்பில் கைதானவர்களின் உறவினர்கள் சிறை முன் ஆர்ப்பாட்டம்

43


ADDED : நவ 14, 2024 04:58 AM

Google News

ADDED : நவ 14, 2024 04:58 AM

43


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி, சிறையில் உள்ளவர்களை பார்க்க அனுமதிக்காததால் உறவினர்கள் கோவை மத்திய சிறை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கடந்த 2022ம் ஆண்டு அக்., 23ம் தேதி காரில் குண்டு வெடித்தது. இதில், காரை ஓட்டி வந்த அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் பலியானார்.

குண்டு வெடிப்பு தொடர்பாக ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே இந்த வழக்கு என்.ஐ.ஏ.,வுக்கு மாற்றப்பட்டது.

என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை நடத்தி மேலும் எட்டு பேரை கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம், மூவரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.

இந்த வழக்கில் தற்போது வரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கோவை மற்றும் சென்னை புழல் சிறைகளில் அடைக்கப்பட்டுஉள்ளனர்.

கடந்த மாதம் கைது செய்யப்பட்ட அபு ஹனிபா, சரண் மாரியப்பன், பவாஸ் ரகுமான் ஆகியோரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.

இந்நிலையில் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள முகமது ரியாஸ், அப்சர் கான் ஆகியோரை சந்திக்க அவர்களின் உறவினர்கள் சென்றபோது, சிறை அதிகாரிகள் அனுமதிக்க மறுத்துள்ளனர். இதனால், அவர்கள் கோவை மத்திய சிறை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கையில்,'' கடந்த மூன்று மாதங்களாக இருவரையும் சந்திக்கவிடாமல் அதிகாரிகள் தடுக்கின்றனர். அவர்களுக்கு சரியாக உணவு கிடைப்பதில்லை என தெரிவிக்கின்றனர். சிறையில் சரியான பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவர்களை சந்திக்க சிறை அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும்,'' என்றனர்.

சிறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ''வழக்கமாக கைதிகளின் தங்கும் இடம், கைதிகள் வைத்திருக்கும் பொருட்கள் உள்ளிட்டவைகளை பரிசோதனை செய்வது வழக்கம். அதற்கு, முகம்மது ரியாஸ், அப்சர் கான் ஆகியோர் ஒத்துழைப்பு வழங்கவில்லை.

''இதனால் கைதிகளுக்கு வழங்கப்படும் ஒரு சில சலுகைகள் அவர்கள் இருவருக்கும் வழங்கப்படவில்லை. மேலும், பேச்சுவார்த்தைக்கு பிறகு உறவினர்கள் அனுமதிக்க ஏற்பாடு செய்யப்படும்,'' என்றனர்.






      Dinamalar
      Follow us