உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 10, 2026 11:41 PM
அ நிறம் | அளவு
நேபாளத்தில், கடந்த 26ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில், தமிழகத்தில் இருந்து சுற்றுலா சென்ற 304 பேர் சிக்கினர். அவர்களில், 220 பேர் மீட்கப்பட்ட நிலையில், 85 பேரை காணவில்லை.
அவர்கள் குறித்து தகவல்கள் கிடைக்காமல், அவர்களின் உறவினர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு சார்பில், அவர்களை கண்டறிய, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது வரை, காணாமல் போனவர்களின் உறவினர்கள், எட்டு குழுக்களாக காத்மாண்டு சென்று, உறவினர்கள் குறித்து விசாரித்துவிட்டு, தமிழகம் திரும்பி உள்ளனர். சம்பவம் நடந்து 15 நாட்களான நிலையில், நேபாளத்தில் மாயமான, 85 தமிழர்களின் நிலை தெரியாமல், அவர்களின் உறவினர்கள் தவித்து வருகின்றனர்.
