sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உப்பள தொழிலாளர்கள் 5,233 பேருக்கு நிவாரணம் 

/

உப்பள தொழிலாளர்கள் 5,233 பேருக்கு நிவாரணம் 

உப்பள தொழிலாளர்கள் 5,233 பேருக்கு நிவாரணம் 

உப்பள தொழிலாளர்கள் 5,233 பேருக்கு நிவாரணம் 


ADDED : அக் 19, 2025 12:55 AM

Google News

ADDED : அக் 19, 2025 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டு கூடுதலாக, 5,233 உப்பள தொழிலாளர்களுக்கு, தலா 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

உப்பு உற்பத்தி பருவகால தொழில். தமிழகத்தில் உப்பள தொழிலாளர்களுக்கு, ஆண்டுக்கு ஒன்பது மாதங்கள் மட்டும் வேலை கிடைக்கிறது. இதனால், தமிழக உடலுழைப்பு தொழிலாளர் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உப்பள தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மழை காலத்தில், ஆண்டுக்கு தலா, 5,000 ரூபாய் நிவாரணத்தை, தமிழக அரசு, 2021 - 22 முதல் வழங்கி வருகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளில், 32,611 தொழிலாளர் குடும்பங்களுக்கு, 16.32 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டில் கூடுதலாக, 5,233 தொழிலாளர்களுக்கு தலா, 5,000 ரூபாய், தமிழக அரசின் உப்பு நிறுவனத்தில் பணிபுரியும், 600 தற்காலிக தொழிலாளர்களுக்கு தலா, 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. இதற்காக அரசு, 8.28 கோடி ரூபாய் செலவிட உள்ளது.






      Dinamalar
      Follow us