sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வருவாய் துறை அலுவலர்கள் தொடர் போராட்டம்: மக்கள் பணிகள் பாதிப்பு: அரசு பாராமுகம்

/

வருவாய் துறை அலுவலர்கள் தொடர் போராட்டம்: மக்கள் பணிகள் பாதிப்பு: அரசு பாராமுகம்

வருவாய் துறை அலுவலர்கள் தொடர் போராட்டம்: மக்கள் பணிகள் பாதிப்பு: அரசு பாராமுகம்

வருவாய் துறை அலுவலர்கள் தொடர் போராட்டம்: மக்கள் பணிகள் பாதிப்பு: அரசு பாராமுகம்

1


UPDATED : மார் 06, 2026 07:14 AM

ADDED : மார் 06, 2026 06:20 AM

Google News

1

UPDATED : மார் 06, 2026 07:14 AM ADDED : மார் 06, 2026 06:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்' என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் துறை அலுவலர்கள், இரண்டாவது நாளாக, நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுதும் வருவாய் துறை அலுவலர்கள், கடந்த பிப்., 25ம் தேதி முதல், பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில், நேற்று 10ம் நாளாக, காத்திருப்பு போராட்டம் நடந்தது. தொடர்ந்து, இரண்டாம் நாளாக நேற்று, 50க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள், பாரிமுனை, ராஜாஜி சாலையில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் வருவாய் துறையினர் போராட்டம் நடத்தி வருவதால், வரி வசூல், ஜாதி, வருமானம், இருப்பிட சான்றிதழ் வழங்கும் பணி, பட்டா மாற்றம் என, ஏராளமான பணிகள் நடக்காமல் உள்ளன. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து, அரசு கவலைப்படாமல், வருவாய் துறை அலுவலர்கள் போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை. இது போராட்டத்தில் ஈடுபட்டோரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிராம உதவியாளர்கள்

தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், கிராம உதவியாளர்கள், தங்களுக்கு நான்காம் நிலைக்கு இணையான, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, பிப்.,5 முதல், தமிழகம் முழுதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று சென்னை எழிலகம் வளாகத்திலிருந்து, 500க்கும் மேற்பட்ட, கிராம உதவியாளர்கள், கோட்டை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்தனர். மாலை விடுவிக்கப்பட்டனர்.

பேராசிரியர்கள்

பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் பரிந்துரை அடிப்படையில், தமிழகத்தில் பல்கலை, கல்லுாரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு, பணி மேம்பாட்டு ஊதியம் வழங்கப்படுகிறது.அதற்கான அரசாணை, தமிழக அரசின் சார்பில், 2021ல் வெளியிடப்பட்டது. கல்லுாரி பேராசிரியர்களுக்கு, பதவி மூப்பு அடிப்படையில், பணி மேம்பாட்டு ஊதியம் வழங்கப்படும்.அந்த வகையில், அரசு கல்லுாரி பேராசிரியர்களுக்கும், அரசு உதவி பெறும் கல்லுாரி பேராசிரியர்களில், கோவை, தஞ்சாவூர் மண்டலங்களை சேர்ந்தவர்களுக்கும், பணி மேம்பாட்டு ஊதியம் வழங்கப்பட்டது.

மற்ற பகுதிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், கடந்த நான்கு ஆண்டுகளாக, பணி மேம்பாட்டு ஊதியம் கோரி, தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த மாதம், கல்லுாரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கடந்த மாதம் 26ம் தேதி, சென்னை இணை இயக்குநரிடம், பணிமேம்பாட்டு ஊதிய அரசாணையை திரும்பி வழங்கி, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்நிலையில், பணி மேம்பாட்டு ஊதியம் கோரி, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லுாரி கல்வி இயக்கக வளாகத்தில், பல்கலை ஆசிரியர்கள் சங்கம், மூட்டா சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று துவங்கியது. ஆண், பெண் பேராசிரியர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என, பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

சான்றிதழ் கிடைக்காமல் மாணவர்கள் அவதி

பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தாசில்தார், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய்த் துறை பணியாளர்கள், கடந்த 24ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வருவாய்த் துறையினர் வேலை நிறுத்தத்தால், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களால், ஜாதி, வருவாய், ஓ.பி.சி., சான்றிதழ்கள் பெற முடியவில்லை. நெல்லை விற்க, அடங்கல் ஆவணம் பெற முடியாமல், விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாகத் திகழ்பவர்களும், பொதுமக்களுக்கு நேரடியாக சேவை வழங்குபவர்களும் வருவாய்த் துறையினர் தான். எனவே, அவர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



டாஸ்மாக் பணியாளர்கள் நாளை முதல் போராட்டம்

டாஸ்மாக் பணியாளர்கள் பணிநிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மாதம், 1,000 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக டாஸ்மாக் நேற்று முன்தினம் அறிவித்தது. இதற்கு, பணியாளர்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இது குறித்து, போராட்ட குழுவினர் கூறியதாவது: அமைச்சர் முத்துசாமியுடன் நடத்திய பேச்சின் போது, 'பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக, குழு அமைக்கப்படும்; அக்குழுவிடம் இருந்து, நான்கு மாதங்களுக்குள் அறிக்கை பெற்று, மேல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, தெரிவித்தார். இடைக்கால நிவாரணமாக, 5,000 ரூபாய் ஊதிய உயர்வு வழங்குமாறு வலியுறுத்தப்பட்டது.
இவை தொடர்பான எந்த அறிவிப்பும், டாஸ்மாக் வெளியிட்ட அறிக்கையில் இடம்பெறவில்லை. எனவே வரும், 7ம் தேதி முதல், சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் அலுவலகம் அருகில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



உண்ணாவிரதம் ஒத்திவைப்பு

அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 2 மாதங்களாக கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து பணி, உண்ணா விரதம், பேரணி என, அடுத்தடுத்த போராட்டங்களில் ஈடுபட்டனர். அரசிடம் நடத்திய பேச்சில், உடன்பாடு ஏற்படாத நிலையில், நேற்று முதல் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட, அரசு டாக்டர்கள் முயன்றனர்.
அவர்களுடன், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் செந்தில்குமார் பேச்சி நடத்தினார். அதேபோல், மருத்துவமனை வளாகத்திற்குள், உண்ணாவிரதமிருக்க அனுமதிக்க முடியாது என, மருத்துவமனை முதல்வர் தெரிவித்தார். இதனால், போராட்டத்திற்கு வந்தவர்கள், மாலை வரை அங்கேயே நின்றிருந்தனர்.
மருத்துவமனை நிர்வாகமும், போலீசாரும், போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததால், தற்காலிகமாக போராட்டத்தை ஒத்தி வைப்பதாக, கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.








      Dinamalar
      Follow us