ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானம்: கவர்னர் ரவி வருத்தம்
ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானம்: கவர்னர் ரவி வருத்தம்
ADDED : ஜன 29, 2024 10:11 AM

சென்னை: தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானம் என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது.
பாட்டாளி வர்க்க சாம்பியனாக அழைத்துக் கொள்ளும் ஓர் அரசியல் கட்சியால் கீழ்வெண்மணி கிராமத்தில் சுற்றிலும் ஏழைகளின் ஓலை குடிசைகளுக்கு மத்தியில், படுகொலை செய்யப்பட்ட 44 ஏழைத் தொழிலாளர்களை நினைவுகூரும் வகையில் விலையுயர்ந்த கான்கிரீட் கட்டுமானம் ஒரு நினைவுச்சின்னமாக அமைந்திருப்பது முரணானது.
தியாகிகள் மற்றும் ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானம். இவ்வாறு அந்த அறிக்கையில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.