sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எண்ணுார், மணலியில் சாலைகள் துண்டிப்பு: 500 வீடுகளில் புகுந்த மழைநீர்

/

எண்ணுார், மணலியில் சாலைகள் துண்டிப்பு: 500 வீடுகளில் புகுந்த மழைநீர்

எண்ணுார், மணலியில் சாலைகள் துண்டிப்பு: 500 வீடுகளில் புகுந்த மழைநீர்

எண்ணுார், மணலியில் சாலைகள் துண்டிப்பு: 500 வீடுகளில் புகுந்த மழைநீர்

2


ADDED : டிச 01, 2024 03:31 AM

Google News

ADDED : டிச 01, 2024 03:31 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்:எண்ணுார், திருவொற்றியூர், மணலி, மணலிபுதுநகர் போன்ற பகுதிகளில், சூறைகாற்றுடன் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.

மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் எண்ணுார், பாரதியா நகர் - நேதாஜி நகர் வரையிலான, எண்ணுார் விரைவு சாலையில், 500 அடி துாரத்திற்கு முழங்கால் அளவு மழைநீர் தேங்கியதால், போக்குவரத்து சிரமம் ஏற்பட்டது

எண்ணுார், தாழங்குப்பம் கடற்கரையில் பலத்த காற்று வீசி, மணல் சுழன்றடித்ததால், ஸ்கூட்டர், பைக், இலகுரக வாகனங்கள் செல்ல முடியவில்லை. அப்பகுதியில், தற்காலிகமாக கூடாரம் அமைத்து தங்கியிருக்கும், 20 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தவிப்பிற்குள்ளாகினர்

பகிங்ஹாம் கால்வாயில், இயல்பை காட்டிலும், 5அடி உயரத்திற்கு மழைநீர் ஆர்பரித்து செல்வதால், 4, 6, 7 ஆகிய வார்டுகளில், இணைப்பு கால்வாய்களின் மதகுகள் அடைக்கப்பட்டு, ராட்சத மின்மோட்டார்கள் வழியாக, மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏழாவது வார்டின், ராஜாஜி நகர், வெற்றி விநாயகர் நகர் பகுதிகளில், 500 வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது

மணலிபுதுநகர், இடையஞ்சாவடியில், காற்றில் மின்வயர் அறுந்து விழுந்ததில், சுரேஷ்குமார், என்பவருக்கு சொந்தமான எருமைமாடு ஒன்று பலியானது.






      Dinamalar
      Follow us