sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'ஆண்ட பரம்பரை...' : சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தியின் பேச்சு

/

'ஆண்ட பரம்பரை...' : சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தியின் பேச்சு

'ஆண்ட பரம்பரை...' : சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தியின் பேச்சு

'ஆண்ட பரம்பரை...' : சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தியின் பேச்சு

20


UPDATED : ஜன 01, 2025 10:15 PM

ADDED : ஜன 01, 2025 07:50 PM

Google News

UPDATED : ஜன 01, 2025 10:15 PM ADDED : ஜன 01, 2025 07:50 PM

20


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''இது ஆண்ட பரம்பரை என நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், '' என அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேசியதாவது: நான் சொல்றேன். இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான். பல வரலாறு மறைக்கப்பட்டு இருக்கிறது. அதை நீங்கள் தெளிவாக தெரிஞ்சுக்கோங்க. படிச்சுருக்கிறீங்க.இன்னைக்கு நாலு பேர் செத்துப் போனான், இரண்டு பேர் செத்துப்போனான். அதுக்கு ஒரு பெரிய இது பண்றான்.

ஆனால், சுதந்திரத்திற்காக இந்த சமுதாயம் 5 ஆயிரம் - 10 ஆயிரம் பேர் செத்து இருக்காங்கன்றதை நீங்கள் வரலாறை புரட்டி பார்க்க வேண்டும். அது வருகிற போது அந்த வரலாறைகளை எல்லாம் இந்த நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக உங்களிடத்தில் நான் தெளிவுபடுத்துகிறேன்.

ஏன்னு சொன்னீங்கன்னா, இன்றைக்கு ஒரு வரலாறு இருக்கு. அது அழகர்கோயிலாக இருந்தாலும் திருமோகூர் கோயிலாக இருந்தாலும் ஆங்கிலேயர்களுடைய பெரிய படையெடுப்பில் கொள்ளையடித்து செல்லுகிற போது, இந்த சமுதாயம் தான் முன்னுக்கு நின்று ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் இறந்திருக்கிறான்.

இந்த வரலாறு இன்றைக்கு மறைக்கப்பட்டு இருக்கிறது. அதுபோல உசிலம்பட்டி பக்கத்துல 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறாங்கனு சொன்னால் கூட. இதற்கு எல்லாம் விவசாயத்துறையில் தொழில்துறையில் நம்மவர்கள் முன்னுக்கு இருந்தாலும் கூட படிப்பறிவில் அன்றைக்கு பின்தங்கி இருந்த காரணத்தினால், நம்முடைய வரலாறை குன்றுவதாக சூழ்நிலை இருந்திருக்கிறது. ஆனால் நீங்கள் பார்க்கிற போது படிப்படியாக அரசு வேலைவாய்ப்புகளில் நீங்கள் வந்து கொண்டு இருப்பதை மனதார பாராட்டுகிறேன். இவ்வாறு மூர்த்தி பேசி உள்ளார்.

அவர் எப்போது பேசினார் என தகவல் வெளியாகாத நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது. பலரும் தி.மு.க.,வை விமர்சித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us