ADDED : ஜன 20, 2026 09:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் அரசு கல்லுாரி பேராசிரியர்களுக்கு, மாபெரும் தமிழ் கனவு திட்டத்தின் கீழ், பயிற்சி பட்டறை நடத்த, தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
தமிழ் மண்ணின் சிறப்புகளை, இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்க, 'மாபெரும் தமிழ் கனவு' திட்டத்தின் கீழ், பேராசிரியர்களுக்கு பயிற்சி பட்டறைகள் நடத்த வேண்டும் என, கல்லுாரி கல்வி கமிஷனர், தமிழக அரசுக்கு கடிதம் எழுதினார்.
அதை ஆய்வு செய்த தமிழக அரசு, 'மாபெரும் தமிழ் கனவு' திட்டத்தின் கீழ், அரசு கல்லுாரிகளில் பணிபுரியும், 1,500 பேராசிரியர்களுக்கு, பயிற்சிப் பட்டறை நடத்த, 1.08 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிட் டுள்ளது.

