ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவில் திருப்பணிக்கு ரூ.125 கோடி!
ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவில் திருப்பணிக்கு ரூ.125 கோடி!
UPDATED : மார் 14, 2025 11:48 AM
ADDED : மார் 14, 2025 11:47 AM

சென்னை: தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் திருப்பணிகளுக்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விபரம் பின்வருமாறு:
* தனுஷ்கோடியில் புதிய பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும்.
* கடல்சார் அறக்கட்டளை ரூ.50 கோடியில் உருவாக்கப்படும்.
* கிண்டியில் பன்முக போக்குவரத்து முனையம் கொண்டு வரப்படும்.
* சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கத்திற்கு நடவடிக்கை எடுக்கப்படும். விமான நிலையம்- கிளாம்பாக்கம் (ரூ.9,335 கோடி ஒதுக்கீடு)
* கோயம்பேடு- பட்டாபிராம் (ரூ.9,744 கோடி ஒதுக்கீடு)
* பூந்தமல்லி- ஸ்ரீபெரும்புதூர் (ரூ.8,779 கோடி ஒதுக்கீடு)
* ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் திருப்பணிகளுக்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு
* உரிமையாளர்கள் இல்லாத நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை திட்டத்திற்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு
* தமிழகத்தில் பெற்றோர் இருவரையும் இழந்த 50 ஆயிரம் குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
* இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு ரூ.673 கோடி நிதி ஒதுக்கீடு.
* விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டத்திற்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு