ADDED : ஆக 26, 2011 01:29 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் திருடு போன 27 லட்ச ரூபாய் மதிப்பிலான நகை, வாகனங்கள் மீட்கப்பட்டன; 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
சந்திரசேகரன் எஸ்.பி., கூறியது: தாண்டிக்குடி பகுதியில் சிவகாமியம்மன் சிலையை திருடிய பண்ணைக்காடு ஈஸ்வரன், பாண்டி, அழகேசன் கைது செய்யப்பட்டனர்; அம்மன் சிலை மீட்கப்பட்டது.
திண்டுக்கல் முனிசிபல் காலனியை சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் இருந்து, ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் தங்க நகைகள் மீட்கப்பட்டன. பாரதிபுரம் ஜக்கிரியா நகரை சேர்ந்த மாதவனிடம் இருந்து 16 பவுன் நகை; ஆண்டிபட்டியை சேர்ந்த பாலாவிடம் இருந்து இரண்டு லட்ச ரூபாய் மீட்கப்பட்டன. மொத்தம் 18 லட்சம் மதிப்பில் 81 பவுன் நகை, வாகனங்கள் மீட்கப்பட்டன. கூடுதல் எஸ்.பி., ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், எஸ்.ஐ., ரமேஷ் கண்ணா தலைமையிலான குழுவினர் இவற்றை மீட்டனர், என்றார்.