sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரேஷனில் இலவச அரிசிக்கு ரூ.4,500 கோடி : கடத்தலை தடுக்க அதிரடி

/

ரேஷனில் இலவச அரிசிக்கு ரூ.4,500 கோடி : கடத்தலை தடுக்க அதிரடி

ரேஷனில் இலவச அரிசிக்கு ரூ.4,500 கோடி : கடத்தலை தடுக்க அதிரடி

ரேஷனில் இலவச அரிசிக்கு ரூ.4,500 கோடி : கடத்தலை தடுக்க அதிரடி


ADDED : ஆக 05, 2011 02:37 AM

Google News

ADDED : ஆக 05, 2011 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : முந்தைய அரசால் கலைக்கப்பட்ட, ஐந்து எல்லையோர ரோந்து படைகள் மீண்டும் புதுப்பிக்கப்படும்.

எல்லைப் பகுதியில், அரிசி கடத்தலை தடுப்பதற்காக, ஒரு புதிய உணவு வழங்கல் குற்றத் தடுப்புப் பிரிவு பொள்ளாச்சியில் அமைக்கப்படும்.



பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பை வழங்கும் வகையில், அனைவருக்குமான பொது வினியோக திட்டத்தை அரசு பின்பற்றுகிறது. சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய், சலுகை விலையில், பொது வினியோக திட்டத்தின் கீழ் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. அரசு பதவியேற்ற இரண்டு மாதங்களில், ரேஷன் அரிசி கடத்திய, 67 பேரை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்துள்ளது. ரேஷன் அரிசி பதுக்கல் மற்றும் கடத்தியவர்களுக்கு எதிராக, 1,519 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

முந்தைய அரசால் கலைக்கப்பட்ட, ஐந்து எல்லையோர ரோந்து படைகள் மீண்டும் புதுப்பிக்கப்படும். எல்லைப் பகுதியில் அரிசி கடத்தலை தடுக்க, ஒரு புதிய உணவு வழங்கல் குற்றத் தடுப்புப் பிரிவு பொள்ளாச்சியில் அமைக்கப்படும்.



பொது வினியோக திட்டத்தில், இலவச அரிசி வழங்குவதால் ஏற்படும் கூடுதல் மானியத்தை கணக்கில் கொண்டு, 2011-12ம் ஆண்டிற்கு கூடுதல் மானியத்திற்காக, திருத்த வரவு-செலவு திட்ட மதிப்பீட்டில், 4,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயில், கோதுமை மாவு, மசாலாப் பொட்டலங்களை சலுகை விலையில் வழங்கும் பொது வினியோக சிறப்பு திட்டத்தை, வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை, அளவுக்கு அதிகமாக உயரும் போது, அவற்றை கொள்முதல் செய்து கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம், நுகர்வோருக்கு அடக்க விலையில் வழங்குவதற்கு ஏதுவாக, 50 கோடி ரூபாயை, தொடக்க நிதி இருப்புடன் கூடிய ஒரு விலைக் கட்டுப்பாட்டு நிதியம் ஏற்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us