sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஏதோ நம்மால முடிஞ்சது... சி.ஐ.டி.யு., கைங்கர்யத்தால் 'சாம்சங்' நிறுவனத்துக்கு ரூ.840 கோடி இழப்பு!

/

ஏதோ நம்மால முடிஞ்சது... சி.ஐ.டி.யு., கைங்கர்யத்தால் 'சாம்சங்' நிறுவனத்துக்கு ரூ.840 கோடி இழப்பு!

ஏதோ நம்மால முடிஞ்சது... சி.ஐ.டி.யு., கைங்கர்யத்தால் 'சாம்சங்' நிறுவனத்துக்கு ரூ.840 கோடி இழப்பு!

ஏதோ நம்மால முடிஞ்சது... சி.ஐ.டி.யு., கைங்கர்யத்தால் 'சாம்சங்' நிறுவனத்துக்கு ரூ.840 கோடி இழப்பு!

57


UPDATED : அக் 23, 2024 07:13 PM

ADDED : அக் 23, 2024 05:19 AM

Google News

UPDATED : அக் 23, 2024 07:13 PM ADDED : அக் 23, 2024 05:19 AM

57


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சி.ஐ.டி.யு., சங்கத்தினர் நடத்திய போராட்டத்தால், 840 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'சாம்சங்' நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

'சாம்சங் இந்தியா' தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக்கோரிய விண்ணப்பத்தின் மீது, உடனடி நடவடிக்கை கோரி, உயர் நீதிமன்றத்தில், சங்க நிர்வாகி எல்லன் தாக்கல் செய்த மனு, நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ஆஜராகி, ''தங்கள் நிறுவன பெயரை பயன்படுத்தக் கூடாது என, தொழிலாளர் நல துணை ஆணையரிடம், சாம்சங் நிறுவனம் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

இதையடுத்து, மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசு, தொழிற்சங்க பதிவாளர் மற்றும் தொழிலாளர் நல துணை ஆணையருக்கு, நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், மனு, நேற்று நீதிபதி மஞ்சுளா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சாம்சங் நிறுவனம் தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி, ''நிறுவனம் பெயரில் தொழிற்சங்கம் துவங்குவது, அடிப்படை உரிமையாகாது. நிறுவன நடவடிக்கையில், அரசியல் தலையீட்டை ஏற்க முடியாது. வர்த்தக குறியீடான சாம்சங் என்ற பெயரை, தொழிற்சங்கம் பயன்படுத்த முடியாது. தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், 840 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் எங்களையும் இணைத்து கொள்ள அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.

தொழிலாளர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ''தொழிற்சங்க சட்டத்தின் கீழ் சங்கத்தை பதிவு செய்வது அடிப்படை உரிமை தென்கொரியாவில் சாம்சங் பெயரை பயன்படுத்தி தொழிற்சங்கம் துவக்கப்பட்டுள்ளது. பல தொழிற்சங்கங்கள் அந்தந்த நிறுவனங்களின் பெயரில் துவங்கப்பட்டுள்ளன. தொழிற்சங்கத்துக்கும் தொழிலாளர் நலத்துறைக்கும் இடையிலான வழக்கில் நிறுவனத்தை கேட்க வேண்டியதில்லை'' என்றார்.

இதையடுத்து, சாம்சங் நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்று, நவம்பர் 11 க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.






      Dinamalar
      Follow us