sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 ' ரூ.5,000 வழங்கியதால் வெற்றி உறுதி இனி ஆட்சியில் பங்கு கேட்க மாட்டார்கள்' :தெம்பாக பேசுகிறார் ஆர்.எஸ்.பாரதி

/

 ' ரூ.5,000 வழங்கியதால் வெற்றி உறுதி இனி ஆட்சியில் பங்கு கேட்க மாட்டார்கள்' :தெம்பாக பேசுகிறார் ஆர்.எஸ்.பாரதி

 ' ரூ.5,000 வழங்கியதால் வெற்றி உறுதி இனி ஆட்சியில் பங்கு கேட்க மாட்டார்கள்' :தெம்பாக பேசுகிறார் ஆர்.எஸ்.பாரதி

 ' ரூ.5,000 வழங்கியதால் வெற்றி உறுதி இனி ஆட்சியில் பங்கு கேட்க மாட்டார்கள்' :தெம்பாக பேசுகிறார் ஆர்.எஸ்.பாரதி

4


ADDED : பிப் 15, 2026 03:44 AM

Google News

ADDED : பிப் 15, 2026 03:44 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: “குடும்பத் தலைவியருக்கு 5,000 ரூபாய் வழங்கியதால், தி.மு.க., வெற்றி உறுதியாகி விட்டது. எனவே, இனி யாரும் ஆட்சியில் பங்கு வேண்டும் என பேச மாட்டார்கள்,” என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

தி.மு.க., வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது.

அதில் பங்கேற்ற தி.மு.க., அமைப்பு செயலர் பாரதி அளித்த பேட்டி:

மகளிர் உரிமைத்தொகை பெறும் 1.31 கோடி குடும்பத் தலைவியருக்கு, தலா 5,000 ரூபாய் வழங்கி, முதல்வர் ஸ்டாலின் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதனால், சட்டசபை தேர்தலில் தி.மு.க., வெற்றி உறுதியாகி விட்டது; எதிர்க்கட்சிகளுக்கு பயம் வந்து விட்டது.

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர், பிரதமர் மோடி துணையோடு, மகளிர் உரிமைத்தொகையை நிறுத்த முயற்சி செய்தனர்.

இதை தெரிந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், முன்கூட்டியே 5,000 ரூபாய் வழங்கியுள்ளார்.

இதனால், தி.மு.க.,வுக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ள ஆதரவை, அனைவரும் அறிவர். எனவே, தி.மு.க., கூட்டணியில், இனிமேல் யாரும், ஆட்சியில் பங்கு வேண்டும் என கேட்க மாட்டார்கள்.

ஆட்சியில் பங்கு குறித்து, காங்., தலைவர்கள் ராகுல், கார்கே, தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேசினால் பதில் சொல்லலாம். மற்றவர்கள் பேசுவதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, தி.மு.க., வழக்கறிஞர்கள் அணி கூட்டத்தில் பேசிய பாரதி, “மகளிருக்கு 5,000 ரூபாய் வழங்கிய தகவல் வெளியானதும், எதிர்க்கட்சி தலைவர்கள் பலருக்கு மாரடைப்பு வந்து விட்டது.

“ஆட்சியில் பங்கு வேண்டும், வெங்காயம் வேண்டும் என கேட்டவர்கள் எல்லாம், 'சீட்' கொடுத்தால் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டனர்,” என கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us