sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு ரூ.325 கோடி வருவாய்: தெற்கு ரயில்வேயில் 3ம் இடம்

/

கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு ரூ.325 கோடி வருவாய்: தெற்கு ரயில்வேயில் 3ம் இடம்

கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு ரூ.325 கோடி வருவாய்: தெற்கு ரயில்வேயில் 3ம் இடம்

கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு ரூ.325 கோடி வருவாய்: தெற்கு ரயில்வேயில் 3ம் இடம்

1


ADDED : ஏப் 29, 2024 05:12 AM

Google News

ADDED : ஏப் 29, 2024 05:12 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : தெற்கு ரயில்வேயில் கோவை ரயில்வே ஸ்டேஷன் கடந்த நிதியாண்டில், 325 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி, அதிக வருவாய் ஈட்டிய ரயில்வே ஸ்டேஷன்கள் வரிசையில், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

தமிழகம் மற்றும் கேரளாவை உள்ளடக்கிய தெற்கு ரயில்வேயில் கடந்த நிதியாண்டில் அதிக வருவாய் ஈட்டிய, 10 முக்கிய ரயில்வே ஸ்டேஷன்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதிக வருவாய் ஈட்டும் ரயில்வே ஸ்டேஷன்களில், கோவை ரயில்வே ஸ்டேஷன் மூன்றா-வது இடத்தை பிடித்துள்ளதாக, 'ராக்' அமைப்பின் இணைச்செயலர் சதீஷ் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில், அதிக வருவாய் ஈட்டிய ரயில்வே ஸ்டேஷன்களில் கோவை, மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த 2022 -- -23-ல், 285 கோடி ரூபாயும், 2023 - -24-ல், 325 கோடி ரூபாயும் வருவாய் ஈட்டியுள்ளது.

இதில், சென்னை, திருவனந்தபுரம், மதுரை, திருச்சி ஆகிய முக்கிய வருவாய் ஈட்டும் ரயில்வே ஸ்டேஷன்கள், தெற்கு ரயில்வேயின் கோட்ட தலைமையகமாக உள்ளது. எனவே, கோவையை தலைமையிடமாக கொண்டு, ரயில்வே கோட்ட அலுவலகம் அமைக்க வேண்டும்.

கோவை போத்தனூரில், கூடுதலாக ரயில்களை பராமரிக்கும் வகையில், பிட்லைன் ஏற்படுத்த வேண்டும். இதனால், புதிய ரயில்களை இயக்க முடியும். பழநி வழியாக பெங்களூரு, துாத்துக்குடி, ராமேஸ்வரம், செங்கோட்டை மற்றும் மதுரைக்கு இரவு நேர ரயில் சேவையை சீரமைக்கும் பணி இன்னும் துவங்கப்படவில்லை.

கோவையில் இருந்து டில்லி, ஜபல்பூர், தன்பாத் மற்றும் திருநெல்வேலிக்கு நேரடி ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். பாட்னா, கோல்கட்டா, பிலாஸ்பூர், சென்னை எழும்பூர் ஆகிய நகரங்களுக்கு புதிய ரயில் சேவை துவக்க வேண்டும்.

இதனால், கோவை ரயில்வே ஸ்டேஷன் வருவாய் அதிகரிக்கும். இது பயணிகளுக்கும், ரயில்வே துறைக்கும் பரஸ்பரம் பயன் தரும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Image 1262973







      Dinamalar
      Follow us