sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரூ.50 தரிசன டிக்கெட் ரூ.100 குன்றத்தூரில் பக்தர்கள் வாக்குவாதம்

/

ரூ.50 தரிசன டிக்கெட் ரூ.100 குன்றத்தூரில் பக்தர்கள் வாக்குவாதம்

ரூ.50 தரிசன டிக்கெட் ரூ.100 குன்றத்தூரில் பக்தர்கள் வாக்குவாதம்

ரூ.50 தரிசன டிக்கெட் ரூ.100 குன்றத்தூரில் பக்தர்கள் வாக்குவாதம்


UPDATED : மார் 06, 2024 08:04 AM

ADDED : மார் 06, 2024 12:42 AM

Google News

UPDATED : மார் 06, 2024 08:04 AM ADDED : மார் 06, 2024 12:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில், தமிழகத்திலேயே, வடக்கு நோக்கி அமைந்துள்ள ஒரே கோவில். கோவிலில் பொது தரிசனம், 50, 100 ரூபாய் கட்டண தரிசன வசதியும் உள்ளது.

இந்நிலையில் நேற்று, கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது, 'ஆன்லைன்' வழியாக 'பிரின்ட்' எடுக்கப்படும் 50 ரூபாய் டிக்கெட்டில், பேனாவால் அடித்து 100 ரூபாய் டிக்கெட் என மாற்றி, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

இதனால், கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பக்தர்கள் கூறியதாவது:

குன்றத்துார் முருகன் கோவிலில், கட்டண கொள்ளை நடக்கிறது. 50 ரூபாய் டிக்கெட்டை 100 ரூபாய்கு விற்று முறைகேடில் ஈடுபடுகின்றனர்.

தவிர, பணம் செலவழித்து, தரிசன டிக்கெட் எடுத்து நாங்கள் வரிசையில் காத்திருக்கும் நிலையில், கோவில் நிர்வாகிகளுக்கு தெரிந்தோரை விரைவு தரிசனத்திற்கு அனுப்புகின்றனர்.

குன்றத்துார் முருகன் கோவிலில், பக்தர்கள் எளிதாக தரிசனம் சுவாமி தரிசனம் செய்ய, அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோவில் செயல் அலுவலர் ஸ்ரீகன்யா கூறியதாவது:


மென்பொருள் பழுது காரணமாக 100 ரூபாய் டிக்கெட் எடுக்க முடியவில்லை.

அதனால், 50 ரூபாய் டிக்கெட் இரண்டாக எடுத்து வழங்கினோம். பக்தர்கள் எதிர்ப்பு காரணமாக, 100 ரூபாய் டிக்கெட் வழங்குவதை, தற்காலிகமாக நிறுத்தினோம். இன்று - நேற்று - மட்டும் தான் இந்த சிக்கல் ஏற்பட்டது. மற்றபடி எந்த முறைகேடு நடக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us