ADDED : பிப் 22, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கனமழையால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், துாத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உதவ, 'சிறப்பு வணிக கடன் திட்டம்' துவக்கப்பட்டது. கூட்டுறவு வங்கிகள் வாயிலாக சிறப்பு முகாம்கள் நடத்தி, கடன்கள் வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டு டிச., முதல் இம்மாதம் வரை, எட்டு மாவட்டங்களில் சிறு வணிக கடன், மகளிர் சுய உதவிக் குழு கடன் என, பல்வேறு பிரிவுகளில், 92,825 நபருக்கு, 713 கோடி ரூபாய்க்கு கடன்வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடக்கிறது. அதில் மக்கள் பங்கேற்று பயன் பெறலாம்.
- பெரியகருப்பன்,
கூட்டுறவு துறை அமைச்சர்.
***