sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கொத்தடிமைகளா, ஆம்புலன்ஸ் ஊழியர்கள்: கொந்தளிக்கிறார் சீமான்

/

கொத்தடிமைகளா, ஆம்புலன்ஸ் ஊழியர்கள்: கொந்தளிக்கிறார் சீமான்

கொத்தடிமைகளா, ஆம்புலன்ஸ் ஊழியர்கள்: கொந்தளிக்கிறார் சீமான்

கொத்தடிமைகளா, ஆம்புலன்ஸ் ஊழியர்கள்: கொந்தளிக்கிறார் சீமான்

1


ADDED : ஆக 13, 2024 06:29 AM

Google News

ADDED : ஆக 13, 2024 06:29 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'ஆம்புலன்ஸ் ஓட்டும் ஊழியர்களின் உழைப்பினை உறிஞ்சும் கொடுஞ்செயலை இனியேனும் கைவிட்டு, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

அவரது அறிக்கை:

மத்திய அரசால் கடந்த 2005ம் ஆண்டு துவங்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை தமிழகத்தில் 2008ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. ஒவ்வொரு ஆண்டும் பல நூறு கோடி ரூபாய் மக்களின் நிதியை வழங்கி தமிழக அரசு ஆந்திராவைச் சேர்ந்த EMRI Green Health Service என்ற நிறுவனத்தின் மூலம் ஆம்புலன்ஸ் சேவையை வழங்கி வருகிறது.

பேரிடர் காலங்கள்

இயற்கை பேரிடர் காலங்களிலும், விபத்து, நோய்த்தொற்று உள்ளிட்ட அசாதாரணச் சூழல்களிலும், பேராபத்திலுள்ள சகமனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியான அவசர ஊர்தி சேவையில் டிரைவர், மருத்துவ உதவியாளர், தகவல் அறிவிப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்காகக் கடந்த 15 ஆண்டுகளாக 6000க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் தொழிலாளர்கள் இரவு-பகல் பாராது தன்னலமற்று பணியாற்றி வருகின்றனர்.

ஊதிய உயர்வு

ஆனால், அதனை நிர்வகிக்கும் தனியார் நிறுவனமோ தமிழக அரசிடம் பல நூறு கோடிகளைப் பெற்றுக்கொண்டு வழங்கும் ஓராண்டு ஒப்பந்த பணி காரணமாக, அவசர ஊர்தி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை, ஈட்டிய விடுப்பு, ஓய்வூதியம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் எதுவும் வழங்காமல் அவர்களைக் கொத்தடிமைகள் போல நடத்தி வருகிறது. ஒவ்வொரு நாளும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து 14 மணி நேரம் வரை, பணியாற்றும் அவசர ஊர்தி ஊழியர்களுக்கு முறையான அகவிலைப்படிகூட வழங்கப்படவில்லை என்பது பெருங்கொடுமை.

இழப்பீடு

படைவீரர்களுக்கு இணையாகப் பணிபுரியும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் பணியின்போது விபத்துக்குள்ளாகி இறந்துவிட்டால் அவர்களது குடும்பத்திற்கு அரசோ, நிறுவனமோ எவ்வித இழப்பீடும் வழங்குவதில்லை என்பதுதான் கொடுமைகளின் உச்சம். அவசர ஊர்தி சேவைக்காக தமிழக அரசு ஆண்டுதோறும் ஒதுக்கும் பலநூறு கோடி ரூபாய்கள் எங்கே செல்கிறது? அதில் முறைகேடு செய்வது ஆட்சியாளர்களா? அல்லது தனியார் நிறுவனமா? மக்களின் உயிரைக்கொல்லும் மதுக்கடைகளை நடத்த முடிந்த தி.மு.க., அரசால், மக்களின் உயிர்காக்கும் அவசர ஊர்தி சேவையை நடத்த முடியாதா?

வாழ்வாதாரம்

அவசர ஊர்தி சேவையில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுத்திட, தமிழக அரசே அதனை ஏற்று நடத்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். அவசர ஊர்தி சேவையில் தன்னலமற்று பணியாற்றும் ஊழியர்களின் உழைப்பினை உறிஞ்சும் கொடுஞ்செயலை இனியேனும் கைவிட்டு, அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக்கி அரசு ஊழியர்களுக்கு இணையான அடிப்படை உரிமைகள் அனைத்தும் முறையாக வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us